பழநி:மழை காரணமாக, பழநி முருகன் கோயில் 'ரோப்கார்' சேவை பாதிக்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் 'ரோப்கார்' தினமும் இயக்கப்படுகிறது. இது பலத்த காற்று, மழையின்போது பக்தர்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் 'ரோப்கார்' நிறுத்தப்பட்டது.இதனால் பக்தர்கள் வின்ச், படி மற்றும் யானைப் பாதை வழியாக மலைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த நாளில் குவிந்த பக்தர்கள், வின்ச்சில் மூன்று மணிநேரம் காத்திருந்து சென்றனர். பொது தரிசன வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE