பேரம்பாக்கம்: கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சிக்குப்பட்டது, எம்.ஜி.ஆர்.நகர். இப்பகுதியில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இரு தினங்களாக பெய்த கன மழையால், இப்பகுதியில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.இதையடுத்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.இது குறித்து, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் கால்வாய் அமைத்து, நீரை வெளியேற்றினர். பின், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE