திருத்தணி : வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது, மின்ஓயர் அறுந்து விழுந்ததில், பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், லோகநாதன், 60. இவருக்கு சொந்தமாக இரண்டு பசு மாடுகள், இரண்டு கன்றுகள் உள்ளன.இந்நிலையில், திருவள்ளூர் நேற்று காலை, லோகநாதன் மனைவி சுஜாதா, பசு மாடு மற்றும் கன்றுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு மாடு, குருசாமி செட்டி விவசாய கிணறு அருகே மேய்ந்த போது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்ஓயர் அறுந்து பசுமாட்டின் மீது விழுந்தது.இதில், மின்சாரம் பாய்ந்து, பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. கிராம நிர்வாக அலுவலர் வினோத், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE