சென்னை : மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, ஒரு வழிச்சாலையாக இருந்த அண்ணாசாலை, இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது. ஆனால், திரு.வி.க., ஸ்மித், ஜி.பி., ஆகிய மூன்று சாலைகளின் சந்திப்புகளிலும், சிக்னல் அமைக்கப்படவில்லை.இதனால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்று, விபத்தில் சிக்கி கொள்வதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது குறித்து, நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, திரு.வி.க., - அண்ணாசாலை சந்திப்பில், போக்குவரத்து ஒழுங்குபடுத்த, புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE