கோயம்பேடு : மல்லிகைப்பூ சீசன் முடிந்ததால், பூ வரத்து குறைந்து, 1 கிலோ மல்லிகை பூ, 1,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மல்லிகைப்பூ வரத்து உள்ளது. முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், பூ விலை உச்சத்தில் இருக்கும். 100 டன் பூ வந்த நிலையில், தற்போது, 1 டன்னுக்கும் குறைவாக வருகிறது.இதையடுத்து, நேற்றைய நிலவரப்படி, விலை அதிகரித்து, 1 கிலோ மல்லிகைப்பூ, 1,000 - 1,200 ரூபாய் வரை விற்பனையானது.
இதைபோல், முல்லை, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும், கணிசமாக அதிகரித்துள்ளது.ஜாதிமல்லி கிலோ, 450 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ, 600 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE