கச்சிராயபாளையம்:கோமுகி அணையில் நேற்று 1,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை முதல்வினாடிக்கு 1,500 கன அடி நீர் வர துவங்கியது. அணையின் மொத்த கொள்ளவான 46 அடியில் தற்போது நீர் மட்டம் 44 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதையும் கோமுகி ஆறு வழியாக பொது பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.நேற்று அதிகாலை முதல் வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு பின்னர் நீர் வெளியேற்றும் அளவு படி படியாக குறைக்கப்பட்டது. பொது பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE