திருப்பூர்:திருப்பூர் அவிநாசி ரோடு, காந்திநகர் அருகே, நேற்றுமுன்தினம் மாலை, 60 வயது முதியவர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ முதியவர் மீது மோதியது. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்த முதியவர் யார் எனவும்; விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் சாமுவேலிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisement