பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே பழையபுதுாரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.புராதன சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் கடந்த ஆண்டு, முதல் பிரம்மோற்சவ விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இரண்டாம் ஆண்டு பிரமோற்சவ விழா, கடந்த, 29ம் தேதி துவங்கியது.முதல் நாள் காலை, 9:00 மணிக்கு கருடக் கொடியேற்றம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சப்த சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை பிற்பகல், 3:00 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சனிக்கிழமை மாலை, 5:00 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நடந்தது.ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணிக்கு பெருமாள், மோகினி அவதார அலங்காரத்தில் காட்சி தந்தார். அனைத்து தினங்களிலும் பிருந்தாவன பஜனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE