திருவாடானை:தொண்டி பேரூராட்சியில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு விளை நிலங்களில் புகுந்து பயிர்களை அழிக்கிறது.
இது தொடர்பாக புகார்கள் தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழிக்கு வந்தன. இதையடுத்து அவர் கூறியதாவது:கால்நடைகளைஉரிமையாளர்கள் சொந்த பொறுப்பில் கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆடு, மாடுகளை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைப்பதுடன் ஆட்டிற்கு 200 ரூபாயும், மாட்டிற்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இரண்டு நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால்கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் கொண்டு விடப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE