கீழக்கரை:-கீழக்கரை தட்டாந்தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி, லிங்கேஸ்வரர், பத்திரகாளியம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவையொட்டி கணபதி ஹோமம், புருஷ ஆத்ம ஹோமம், ருத்ரஜெபம், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. உலக நன்மை வேண்டி சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE