சேலம்: சேலம், அழகாபுரம் பெரியபுதூர் சாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிசாமி, 70. ஓமலூரில், நேற்று உறவினர் திருமணத்தில் பங்கேற்க, மனைவி சுசீலா, 50, மகள் கனகா, 35, ஆகியோருடன் ஆட்டோவில் சென்றார். கருப்பூர் அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிரே, காலை, 8:45 மணிக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த எரிபொருள் சரக்கு லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது. உடல் நசுங்கி கனகா துடிதுடித்து இறந்தார். பழனிசாமி, சுசீலா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். கருப்பூர் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு, காயமடைந்த தம்பதியை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும், லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் திருமாவளவன் தப்பிவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE