குமாரபாளையம்: குமாரபாளையம், காவிரி ஆற்றில் இளம்பெண் சடலம் கரை ஒதுங்கியது. குமாரபாளையம், சார்பதிவாளர் அலுவலகம் அருகே, மேம்பாலம் கீழே, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் கரையோரம் ஒதுங்கியது. நேற்று காலை, 6:00 மணியளவில் காவிரியில் குளிக்க, துணி துவைக்க செல்வோர், இதுகுறித்து, குமாரபாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தந்தனர். ஆற்றில் மிதந்த நிலையில் இருந்த சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE