கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில் அதிக வெற்றிலை உற்பத்தி காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர், பிள்ளபாளையம், மகிளிப்பட்டி, கள்ளப்பள்ளி, திருக்காம்புலியூர் ஆகிய பகுதியில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால், உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வெற்றிலைக்கு விலை கிடைக்கவில்லை. தற்போது, 100 கவுளி கொண்ட மூட்டை, 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE