தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30). கந்து வட்டி தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5) மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில் சின்னமுத்திரன் இறந்து விட்டான்.2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என சுவரில் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து புளியரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.