திருப்பதி : ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, பீமவரத்தில், 55 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மகள் திருமணமாகி ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனியாக இருந்த மூதாட்டியை, மூன்று இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதில் தொடர்புடைய ஒருவனை மட்டும் கைது செய்தனர். மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.மூதாட்டி தனியாக இருப்பதை கண்காணித்த மூவரும், இந்த கொடிய செயலில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் பிடிபடாமல் இருக்க, சம்பவ இடத்திலிருந்து, மிளகாய் பொடி துாவி தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE