புதுச்சேரி:புதுச்சேரியில் நடந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி வரவேற்றார். ஜான்குமார் எம்.எல்.ஏ., செயலர் ஆலிஸ்வாஸ் முன்னிலை வகித்தனர்.விழாவில், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த முற்றிலும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 11 மாற்றுத்திறனாளி தம்பதியர்களுக்கு திருமண நிதியுதவி, முடநீக்கு கருவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை துணை இயக்குனர் கலாவதி, கண்காணிப்பாளர் அல்லிமுத்து செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE