கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையத்தில் மாயமான சப் இன்ஸ்பெக்டரின் பைக் நாங்குநேரி அருகே மீட்கப்பட்டது.
கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான ராயல் என்பீல்டு பைக்கை 4 நாட்களுக்கு முன், வெங்கட்டாம்பேட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் துாத்துகுடி மாவட்டம், நாங்குநேரி அருகே புல்லட் பைக் ஒன்று விபத்தில் சிக்கி கேட்பாரற்று கிடந்துள்ளது. நாங்குநேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது கச்சிராயபாளையத்தில் காணாமல் போன சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE