விழுப்புரம்:காணையில் உள்ள வி.இ.டி., வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை, வி.இ.டி., கல்விக்குழும துணைத் தலைவர் தனபால் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். காணை சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.கண்காட்சியில், மாணவ, மாணவிகள் தங்களின் அறிவியல் சார்ந்த படைப்புகளை கண்காட்சி மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக் குமார், சிவானந்தன், கல்லுாரி முதல்வர் பழநி உட்பட பெற்றோர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ஆனந்த குமார் செய்திருந்தார். ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE