உளுந்துார்பேட்டை:திருவெண்ணெய்நல்லுார் அருகே 5 மாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லுார் அடுத்த ஆனத்துார் ஊராட்சிக்குட்பட்ட தொட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் சூர்யா, 20; இவருக்கும் ஆனத்துாரைச் சேர்ந்த சக்திவேல் மகன் கணேஷ்பாபுவுக்கும், 25; என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது சூர்யா, 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் சூர்யா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து சூர்யா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE