கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடியில் பெரிய குளம் உள்ளது. மழை நன்றாக பெய்யும் போது, பி.ஏ.பி., வாய்க்காலில் செல்லும் உபரி தண்ணீரை, இக்குளத்திற்கு திறந்துவிட,பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனால், பொதுப்பணித்துறையினர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு, தண்ணீர் விடப்பட்டது.ஆனால், மெட்டுபாவியில் இருந்து, கோதவாடி குளம் அருகே வந்து சேர்வதற்குள் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதில், மெட்டுபாவி முதல் வடசித்துார் வரையுள்ள குட்டை மற்றும் செக்டேம்களில் தண்ணீர் நிறைந்தது.ஆனால், குளத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. இதனால், விவசாயத்திற்கு பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் பாசனம் தேவைப்படவில்லை.இந்நிலையில், நேற்று முன் தினம் சேரிபாளையம் முதல் கோதவாடி வரையுள்ள பி.ஏ.பி., வாய்க்கால், 15வது மடையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது.இரண்டு நாளாக, பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE