விருதுநகர்:''உள்ளாட்சி
தேர்தல் பணிக்காக 25 தேர்தல் அலுவலர்கள், 591 உதவி அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதாக,'' கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகரில்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான
தேர்தல்
முன்னேற்பாடு பணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் 20 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் , 200 ஒன்றிய
கவுன்சிலர்கள், 450 ஊராட்சி தலைவர்கள் என 4,042
பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
மாவட்ட ஊராட்சி
கவுன்சிலர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 3 தேர்தல் அலுவலர்கள், 20
உதவி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பணிகளை மேற்கொள்ள 11
அலுவலர்கள், 39 உதவி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு
உறுப்பினர்கள் பணிகளை மேற்கொள்ள 11 அலுவலர்கள், 532 உதவி
அலுவலர்கள் என 25 தேர்தல் அலுவலர்கள், 591 உதவி
அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.
டி.ஆர்.ஓ., உதயக்குமார், திட்ட இயக்குனர் சுரேஷ், சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், நேர்முக உதவியாளர் பழனி பங்கேற்றனர்.