செஞ்சி : குடி போதையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வெங்கந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி, 38; குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்து விட்டு மனைவி சீதாலட்சுமியை, 33; அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 1ம் தேதி குடிபோதையில் சீதாலட்சுமியை தாக்கினார்.இதில் படுகாயமடைந்த சீதாலட்சுமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து லட்சாதிபதியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE