கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டினை ஒட்டியுள்ள மழை நீர் வடிகாலில், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக, இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
கிணத்துக்கடவில், மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடும், கான்கிரீட் துாண்களுக்கு இடையே சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டுள்ளது.மேம்பாலத்தின் மேல் பெய்யும், மழை நீர் வடிந்து கான்கிரீட் துாண்கள் வழியாக பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் வழியாக வந்து, சென்டர் மீடியானில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் விடப்பட்டு வரும் பணியும் நடந்து வருகிறது.இந்நிலையில், சர்வீஸ் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மழைநீர் வடிந்து செல்வதற்காக, ஏற்கனவே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மேல் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக, அதனை ஒட்டி இரும்பு தடுப்பு பொருத்தும் பணி, அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை ஒட்டி துவங்கியுள்ளது.இரும்பு தடுப்பு அமைக்கப்பட்ட பின், பாதசாரிகள் மழைநீர் வடிகால் மீது நடந்து செல்லலாம். சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், மழைநீர் வடிகால் மீது மோதாமல் இருப்பதற்காக, இரும்பு தடுப்பு அமைக்கப் படுகிறது.முதியவர்கள் மழைநீர் வடிகால் மீது ஏறி செல்லும்போது, இரும்பு தடுப்பினை கையால் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக நடந்து செல்ல, இரும்பு தடுப்பு பயன்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE