திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், ராசாப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம், 30; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா, 27. இரு குழந்தைகள் உள்ளனர். சுந்தரம் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார்.மனமுடைந்த ரஞ்சிதா, எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement