ஐதராபாத்: பெண் டாக்டரை பலாத்காரம் செய்த 4 குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக, சாம்ஷாபாத் போலீஸ் துணை கமிஷனர் பிரகாஷ் ரெட்டி கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் தொடர்பான விசாரணைக்கு, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை சைதராபாத் போலீசார் அழைத்து சென்றனர்.. குற்றம் எப்படி நடந்தது என்பது பற்றி விளக்குமாறு குற்றவாளிகளிடம் கூறினர். ஆனால், குற்றவாளிகள், போலீசாரிடம் இருந்த ஆயுதங்களை பறித்து சுடத்துவங்கினர். இதனால், தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில், 4 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றார்.

சைதாராபாத் போலீஸ் கமிஷனர் வி சி சஜநர் கூறுகையில், குற்றவாளிகள் முகமது ஆரிப், நவீன் சிவா, சென்னகேசவலு ஆகியோர் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணிக்குள் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன். இதன் பிறகு கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE