ஈரோடு:பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் ஏதுமின்றி ரயிலில் பயணம் செய்த, வங்கதேச வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வங்கதேச நாட்டைச் சேர்ந்த வாலிபர், சந்தேகத்துக்கு இடமான வகையில், ரயிலில் பயணம் செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், ஈரோடு வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் சோதனை நடத்தி, ஒரு வாலிபரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவரை, ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வங்கதேசம், தாகாவைச் சேர்ந்த, உஜ்ஜல்குமார் தத்தா, 29, என்பதும், பாஸ்போர்ட், விசா இல்லாததும் தெரிந்தது.வங்கதேசத்தில் இருந்து, மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல், ஈரோடு வழியாக, பயணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இது குறித்த தகவல், வங்கதேச துாதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE