திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாராணியைச் சேர்ந்தவர் பழனி, 58; சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி சாந்தி, 50. இவர்களது மகன் சுரேந்தர், மகள் லோகேஸ்வரி. பழனி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பணியிலிருந்த அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று காலை உயிரிழந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE