கூலித்தொழிலாளி பலிமேலுார்: பாண்டியன்நகர் கூலி தொழிலாளி அப்துல்அஜீஸ் 23, நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு டூ வீலரில் சென்றார்(ெஹல்மெட் அணிந்திருந்தார்). நரசிங்கம்பட்டி நான்கு வழிச்சாலையில் நின்ற லாரி மீது டூ வீலர் மோதியதில் அப்துல் அஜிஸ் இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் நகை பறிப்புமேலுார்: பதினெட்டாங்குடி வி.ஏ.ஒ., ரவிச்சந்திரபிரபு மனைவி தேவிராஜலெட்சுமி 37. இவர் நேற்று முன்தினம் தனியாக வீட்டிலிருந்த போது மின் கணக்கீடு செய்ய வந்திருப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்த ஒரு பெண் உட்பட மூவர் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி 2 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லூரி ஆசிரியர் 'போக்சோ'வில் கைதுஎழுமலை : இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம் 30, அப்பகுதி தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மானபங்கம்படுத்தினார். மாணவியின் தந்தை உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய எஸ்.ஐ., மணிமொழி போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE