சாயல்குடி, ஜன. 11--
-சாயல்குடி அருகே மலட்டாறு வி.வி.எஸ்.எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொடைக்கானலில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.முகேஷ் பாண்டியன், ஜெயதீபன், டிராவிட் ஆகியோர் கட்டா பிரிவில் தங்கப் பதக்கம், பிரகாஷ் வேல், காட்வின் ராஜ், சந்தோஷ், காவிய தர்ஷன், முகேஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம், திலக ராஜன், திலீபன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.சண்டை பிரிவில் முகேஷ், பிரகாஷ் ஆகியோர் வெள்ளி பதக்கமும், காவியதர்ஷன், சந்தோஷ் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி, முதல்வர் அங்காளேஸ்வரி, கராத்தே பயிற்சியாளர் முத்து ராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE