காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில், மாடுகள் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில சமயம், இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு விபத்தும் ஏற்படுகிறது.இதனால், மாடுகள் வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் அனுப்பினர்.இது குறித்து, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:மாடு வளர்ப்போர், அவரவர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். இனியும், சாலையில் திரிந்தால், மாட்டின் உரிமையாளரிடம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத நடவடிக்கையை எச்சரிக்கையாக நினைக்க வேண்டும். மீண்டும் மாடுகளை திரியவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE