சேலம்: மூன்று சிறப்பு முகாமில், 44 ஆயிரத்து, 947 பேர், வாக்காளராக சேர விண்ணப்பித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த டிச., 23ல், வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்தும், 3வது முகாம் நேற்று நடந்தது. மொத்தம், 1,163 மையங்களுக்கு உட்பட்ட, 3,276 ஓட்டுச்சாவடிகளில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க; நீக்கம் செய்தல், திருத்தம், தொகுதிக்குள் மாற்றம் செய்வதற்கான படிவம் தனித் தனியே வழங்கி, பூர்த்தி செய்து, அதை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திரும்ப பெற்றனர். 2020, ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், வாக்காளராக சேரலாம். அதற்கான வாய்ப்பு, வரும், 22 வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயர் சேர்க்க, 10 ஆயிரத்து, ஐந்து பேர், நீக்க, 1,927 பேர், திருத்தம் செய்ய, 1,048 பேர், தொகுதிக்குள் மாற்றம் செய்ய, 1,061 பேர் என, மொத்தம், 14 ஆயிரத்து, 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சம், சேலம் வடக்கில், பெயர் சேர்க்க, 2,057 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த, 4, 5ல் நடந்த முகாம்களில், பெயர் சேர்க்க, 34 ஆயிரத்து, 942 பேர் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் சேர்த்து, இதுவரை, 44 ஆயிரத்து, 947 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு முகாம், இன்று நிறைவடைகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE