அரூர்: அரூரில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், வர்ணதீர்த்தம், முருகனார் கோவில் தெரு, பெரியார் நகர், பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குழந்தைகள், சிறுவர்களை நாய்கள் துரத்தி செல்வதால், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைகின்றனர். பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம் உள்ளிட்ட இடங்களில், இருசக்கர வாகனங்கள் வரும் போது, நாய்கள் குறுக்கே வருவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE