கரூர்: தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில், சுகாதார மேம்பாட்டு திட்டத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் விளையாடி வந்தனர். ஆனால், நாளடைவில் பூங்கா போதிய பராமரிப்பின்றி விடப்பட்டது. தற்போது, சுகாதார பூங்காவில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. பூங்காவும் பூட்டப்பட்டுள்ளது. இதை பராமரித்து, முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால், அப்பகுதி மக்களுக்கும், சிறுவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE