கரூர்: கரூர், செல்லாண்டிப்பாளையத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் சிக்கனம் குறித்து, பிரசாரம் நடத்தப்படும் வேளையில், இதுபோன்று தண்ணீர் வீணாவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, கரூர் பகுதியில் போதிய குடிநீர் வழங்குவதில்லை. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE