பெங்களூரூ: களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு முகாமிட்டிருந்த தமிழக கியூ பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து தமிழகம் கொண்டு வர உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்கை பிடிக்க போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (14 ம் தேதி) உடுப்பி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கவராதிகள் இருவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இருவரும் கேரளா சென்று மடிச்சூரில் இருந்து உடுப்பி வந்துள்ளனர். பின்னர் மங்களூரு வழியாக நேபாளம் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE