வால்பாறை:ரத்து செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை மீண்டும் துவங்கும் வகையில், டெண்டர் விட வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வால்பாறை நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூட்டம் தலைவர் அமீது தலைமையில் நடந்தது. ஒப்பந்ததாரர் பொன்கணேஷ் வரவேற்றார். கூட்டத்தில், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மக்கள் நலன் கருதி, டெண்டர் எடுத்த வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விட வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒப்பந்ததாரர் சங்க தலைவராக அமீது மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE