வால்பாறை:வால்பாறையில், 104 மையங்களில் குழந்தைகளுக்கு வரும், 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வரும், 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வால்பாறை நகரில், 44 இடங்களிலும், முடீஸ் பகுதியில், 28 இடங்களிலும், சோலையாறு அணை பகுதியில், 32 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பகுதியில், 104 மையங்களில் வரும், 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, 20, 21 ஆகிய தேதிகளில் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முகாமில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாமல் அழைத்து வந்து சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE