இந்த செய்தியை கேட்க
புதுச்சேரி : மேற்கு வங்கம், புதுச்சேரி, உத்தரகாண்ட் மாநில பா.ஜ., தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் முன்னிலையில் நடந்த தேர்தலில், சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாமிநாதன், புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.

மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலீப் கோஷ் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கும் தேர்தல் நடந்தது. இதில், திலீப் கோஷ் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உத்தர்காண்ட் மாநில பா.ஜ., தலைவராக பன்ஷிதார் பகத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அங்கு, கலதுங்கி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE