புதுடில்லி: 'பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகள் மீது, சர்வதேச அளவில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும்' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
நடவடிக்கை
டில்லியில் நடைபெறும் ரெய்சினா மாநாட்டில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது:பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து, அவர்களை வளர்த்துவிடும் நாடுகள் இருக்கும் வரை, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை, நம் கூட்டாளிகளாக வைத்துக் கொண்டு போரிட முடியாது.
மிகப்பெரிய சவால்
அவ்வாறு செய்யும் நாடுகளை, தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் மீது, சர்வதேச அளவில், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும்.தலிபான் உட்பட யாராக இருந்தாலும், பயங்கரவாதத்தை கைவிட முன் வருபவர்களுடன், அமைதி பேச்சு நடத்துவதை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் பேசுகையில், ''இந்தியாவுடன், ஆப்கானிஸ்தானுக்கு எப்போதுமே நல்லுறவும், நட்பும் உண்டு.''இதை, எங்கள் சகோதர நாடான பாகிஸ்தானுக்கு புரிய வைப்பதில், இக்கட்டான சூழ்நிலை உள்ளது. அதை சமாளிப்பது, ஆப்கனுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE