ராமநாதபுரம் : மாநில அளவிலான ஓ.என்.ஜி.சி., காவிரி பெரியார் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டியில் கடலுார், திருவாரூர் அணிகள் முதலிடம் பெற்றன.
ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், ஓ.என்.ஜி.சி., சார்பில் காவிரி கோப்பைக்கான 6ம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் அரியலுார், கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் ஆகிய 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் பிரிவில் கடலுார் அணி முதலிடமும், ராமநாதபுரம் அணி இரண்டாமிடமும் வென்றது. ஆண்கள் பிரிவில் திருவாரூர் முதலிடமும், புதுக்கோட்டை இரண்டாமிடமும் பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ராமநாதபுரம் வாலிபால் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ரொக்கத் தொகை, கோப்பையை வழங்கினார். செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE