நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-பாலுார் மெயின்ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட கே.கே.ஜி., திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது.மண்டப உரிமையாளர் கண்ணன், சம்பாவதி, குணாநிதி, நிஷாந்தி வரவேற்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல சன்னியாசிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர்.சத்தியா டிம்பர்ஸ் சத்தியபாலன், சீனிவாசன், மோகன், நடுவீரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், சி.என்.பாளையம் வைத்திலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜாராம், குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி, அறவாழி, வழக்கறிஞர் விஷ்ணுதாசன், வன்னியர் திருமண மண்டபம் ஞானசேகரன், பாண்டியன்,சேகர் கலந்து கொண்டனர்.மேலாளர் ரஜினி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE