குன்னுார் : குன்னுார் நகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசு தினத்தில், துப்புரவு தொழிலாளர் தேசிய கொடியேற்றினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில், மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார். நகராட்சி கமிஷனர் பாலு தலைமை வகித்து பேசினார்.நகராட்சி மற்றும், 'கிளீன் குன்னுார் அமைப்பு' இணைந்து சேகரித்த, 8.22 டன் பிளாஸ்டிக் பண்டல்கள், பர்னஸ் ஆயில் தயாரிக்க, விற்பனை செய்யப்பட்டது. இதில் கிடைத்த தொகையில், பரிசுகள் வாங்கி தொழிலாளர்கள், ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டன.
குன்னுார் நகராட்சியில் இதுவரை, குடியரசு தினத்தில், தலைவர்கள் மற்றும் கமிஷனர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றிய நிலையில், வரலாற்றில் முதல் முறையாக துப்புரவு தொழிலாளர், தேசிய கொடியேற்றியது, ஊழியர்கள் மற்றும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE