சீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் அறிவிப்பு
சீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் அறிவிப்பு

சீனாவில் தவிக்கும் இந்தியர்கள்: மூன்றாவது உதவி எண் அறிவிப்பு

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
பீஜிங் : சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவ, ஏற்கனவே இரு அவசர தொலைபேசி எண்களை அறிவித்திருந்த, பெய்ஜிங்கில் உள்ள இந்திய துாதரகம், தற்போது மூன்றாவது உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங் : சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவ, ஏற்கனவே இரு அவசர தொலைபேசி எண்களை அறிவித்திருந்த, பெய்ஜிங்கில் உள்ள இந்திய துாதரகம், தற்போது மூன்றாவது உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.



latest tamil news


சீனாவில் இதுவரை, கொரோனோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருக்கிறது. வைரஸ் தாக்குதலால், 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் மாணவர்கள் 250 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் சிலர் வசித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் வுஹான் நகரில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இவர்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியா மற்றம் சீன அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.



latest tamil news

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்கனவே 12 மாகாணங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் வசிக்கும் அமெரிக்க மாணவர்களை வெளியேற அறிவுறுத்தி உள்ள சீனா, இந்திய மாணவர்களையும் பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வுஹான் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 700 இந்திய மாணவர்கள் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வுஹான் நகரை விட்டு பல மாணவர்கள் வெளியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.



இந்தியர்களுக்கு உதவுவதற்காக +86 1861 208 3629 மற்றும் +86 1861 208 3617 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த எண்களுக்கு கடந்த 2 நாட்களில் 600 க்கும் அதிகமான அழைப்புக்கள் வந்துள்ளது. அவசர எண்களின் தேவை அதிகரித்திருப்பதால் 3வது உதவி எண்ணாக +86 1861 095 2903 அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

Indian Ravichandran - Chennai,இந்தியா
27-ஜன-202014:01:20 IST Report Abuse
Indian  Ravichandran எப்படியாவது நம்ம பிள்ளைகளை கொண்டுவந்துவிடு இந்திய அரசே. படிப்பு வேலைக்காக சென்று கஷ்டத்தில் மாட்டி விட்டனர் காப்பாற்றுவது நம் கடமை.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
27-ஜன-202013:35:25 IST Report Abuse
 Sri,India கழுதக் கறி ,மாட்டுக்கறி ,பாம்புக்கறி தின்றால் இது தான் நிலைமை என உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது இயற்கையான உணவை தவிர்த்து கண்டதை தின்றால் கொடூர நோய் வந்து சாக வேண்டியது தான் பாக்கி.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
27-ஜன-202012:11:50 IST Report Abuse
mohan சீனா, தன் நாடு முழுவதும், மஞ்சள், துளசி, குறு மிளகு போடி, கலந்த கசாயத்தை, தினமும், மூன்று வேலை குடித்து வர சொல்லவும்...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
27-ஜன-202019:25:50 IST Report Abuse
sankarஇது எல்லாம் மூட நம்பிக்கை பாஸ் . ஒரு பெரியார் படம் வைச்சு இந்து சாமிய திட்டுனா சரியாயிரும்...
Rate this:
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
28-ஜன-202003:51:37 IST Report Abuse
Kumar Senthilநல்ல ஆலோசனையாக இருக்கே. நிலவேம்பு குடிநீரும் முயற்சி செய்யலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X