கருணை நிராகரிப்பை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முறையீடு

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி : கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான்.2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என

புதுடில்லி : கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான்.




latest tamil news


2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் அனைத்து கோர்ட் மற்றும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது.



latest tamil news


ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் என்பவன், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான். தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவன் கேட்டுள்ளான்.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, பிப்.,1 ம் தேதி யாராவது தூக்கிடப்படுவார்கள் என்றால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-ஜன-202011:35:50 IST Report Abuse
Swaminathan Chandramouli உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எல்லை மீறி போகிறார் .நாட்டின் உச்ச தலைவரான ஜனாதிபதி நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை தள்ளுபடி செய்த பின்பும் ஜனாதிபதியை அவமானப்படுத்தும் முகமாக திரும்பவும் குற்றவாளியின் வக்கீல் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விவாதத்திற்கு எடுத்து கொண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட இருக்கும் இந்த நான்கு கற்பழிப்பு குற்றவாளிகளின் தூக்கு தண்டனைநடை பெறாமல் இருக்கும்படி அந்த தேதியில் இன்னும் யார் யாருக்கு அதே தேதியில் தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறதோ அவைகளும் முன்னுரிமை படி பரிசீலிக்க படும் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜன-202005:54:33 IST Report Abuse
D.Ambujavalli கோடி கொடுத்தாவது தன உயிரைக் காத்துக்கொள்ள விதவிதமாக முயற்சி மேற்கொள்ளும் இந்தப் பன்னாடைகள், கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த மகளை நாசம் செய்து கொலை செய்த போது அவருக்கு என்ன வாய்ப்பை அளித்தார்கள் தலையால் தண்ணீர் குடித்தாலும் தண்டனையைத் தள்ளிப்போடவே கூடாது நீதிபதியையே விலைக்கு வாங்கி விட்டார்களோ எனத் தோன்றுகிறது இந்தத் தீர்ப்பைப் படிக்கையில்
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
27-ஜன-202019:10:23 IST Report Abuse
oce தீர்ப்ளித்தபின் நீதிபதி அந்த தீர்ப்பை குழப்புவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதை கனம் கோர்ட்டார் அவர்கள் சீட்டிங் கேஸாக பதிவு செய்து அந்த நீதிபதியை விசாரிக்கலாம். இந்த ஆளால் நீதியின் தீர்ப்பு களங்கப்பட்டுள்ளது. வழக்கில் சந்தேகம் எழுப்புவதாக உள்ளது. சந்தேகத்தின் பலனை கைதிக்கு கொடுத்து நிரபராதியாக்க முயல்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X