வேலைவாய்ப்பற்றோர் பட்டியல் : திக்விஜய் சிங் யோசனை

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வதற்கு பதில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் பட்டியலை மத்திய அரசு தயாரிக்கலாம் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து விமர்சித்தும், போராட்டங்கள் நடத்தி வந்த காங்., தற்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வதற்கு பதில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் பட்டியலை மத்திய அரசு தயாரிக்கலாம் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.



latest tamil news


குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து விமர்சித்தும், போராட்டங்கள் நடத்தி வந்த காங்., தற்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து டுவிட்டரில், பிரதமர் மோடிக்கு அவர் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.



அதில், நமது பிரதமருக்கு மிகவும் நேர்மையான கோரிக்கை. நாடு முழுவதும் சமூகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்வதற்கு பதில், தேசிய படித்த வேலையில்லாத இந்திய குடிமக்கள் பதிவேட்டை அவர் தயாரிக்கலாம். ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். அவர்களின் நாட்டை துண்டாக்கும் முயற்சியில் இது வராது, என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக மத்திய அரசை காங்., கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த பிரச்னைகளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எழுப்பி, பார்லி.,யில் போராட காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் திக்விஜய் சிங் இப்படி ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

Indhuindian - Chennai,இந்தியா
28-ஜன-202006:05:57 IST Report Abuse
Indhuindian சரியாதான் சொன்னீங்க ஆனா சொல்றதுக்கு முன்னாடி யோசனையே பண்ண மாட்டிங்களா அது சரி யோசனை பண்ணி சொல்றதுங்கறது காங்கிரஸ் கலாச்சாரத்துலயே இல்லேயே. இந்த மாதிரி வேலைல்லாதவங்க சென்சஸ் எடுக்கணும்னா முதல்லே அதுலே யார் யார் இந்திய குடிமகன் யார் யார் திருட்டு தனமா இங்கே வந்து சொகுசா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிறது அதுக்கு NRC வேணுமா வேணாமா?
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
27-ஜன-202023:00:42 IST Report Abuse
Krishna Very Good Idea. UNEMPLOYED LIST Must Be Prepared for Providing Govt Jobs in All Depts At All-Levels (Only Minm Wages & One Per Family Norm) After Abolishing All Useless-Corrupt Govt Officials With VVVFat Pay-Scales (incl. Police & Judges Being More Ruler-Biased)
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-ஜன-202022:47:41 IST Report Abuse
R. Vidya Sagar அந்த சீரிய பணியை காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது கூட உங்களுக்கு தெரியாதா? அதில் ராகுல் காந்தி பெயர் கட்டாயம் இடம் பெற்று இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ATM சென்று வருவது போன்ற எடுபிடி வேலைகளை செய்து நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X