ஆயுதங்கள் தயார்: போருக்கு இந்தியா ஏற்பாடா ?

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி : சுமார் 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவம், ராக்கெட்கள், ஏவுகணைகள், அதிநவீன பீரங்கிகள் என படிப்படியாக ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.40 நாட்கள் போர் நடந்தாலும் அதை சமாளிக்கும் அளவிலான ஆயுதங்களை இந்தியா சேமித்து வைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு அளவில் 10 நாட்கள் தொடர்ந்து போர் செய்வதற்கு தேவையான அனைத்து வகையான

புதுடில்லி : சுமார் 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவம், ராக்கெட்கள், ஏவுகணைகள், அதிநவீன பீரங்கிகள் என படிப்படியாக ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.




latest tamil news


40 நாட்கள் போர் நடந்தாலும் அதை சமாளிக்கும் அளவிலான ஆயுதங்களை இந்தியா சேமித்து வைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு அளவில் 10 நாட்கள் தொடர்ந்து போர் செய்வதற்கு தேவையான அனைத்து வகையான ஆயுதங்களும் இந்தியாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news


தற்போது போர் செய்யும் திட்டம் எதுவும் ராணுவத்திற்கு இல்லை என்றாலும் பாக்., மற்றும் சீனாவை மனதில் வைத்து ஆயுத பலத்தை ராணுவம் அதிகரிக்க துவங்கி உள்ளது. பல சிக்கலான மற்றும் கடுமையான ஆயுத வகைகளில் முன்பெல்லாம் மிகப் பெரிய பற்றாக்குறை இருந்து வந்தது. இந்த குறைபாடுகளை கலைவதற்காக 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரூ.12,890 கோடி மதிப்பிலான 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.



latest tamil news


தற்போது 10(ஐ) ரக ஆயுத குறைபாடுகளை சரி செய்து, அதிக அளவில் ஆயுதங்களை கையிருப்பு வைத்துள்ள இந்தியா, அடுத்த கட்டமாக 40(ஐ) ரக ஆயுத பலத்தை அதிகரிக்க இலக்க நிர்ணயித்துள்ளது. 2012 ம் ஆண்டு முதலேவிமானப்படை, வீரர்கள், பீரங்கிகள் என அனைத்து வகையிலும் பாதுகாப்பு துறை பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (47)

S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
03-பிப்-202013:17:12 IST Report Abuse
S.VELMURUGAN CAA க்கு எதிராக மக்களை போராட தூண்டிவிட்டு, போராடுற மக்களுக்கு முன்னாடி வந்து திரு.மோடி அவர்கள் பதில் சொல்லனும் என்று கேட்கிற திரு.இராகுல் அவர்களே , இந்திய தாய் திரு நாட்டின் எல்லையிலே தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அல்லும் பகலும் கண்ணிமையாது காலயராது நம் தேசத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து நம்மையும் அமைதியாக வாழ வைத்து நிற்கும் நம் காவல் தெய்வங்களாகிய 13 இலட்சம் படை வீரர்களில் ஒரு 10 பேரிடம் தாங்கள் நேரடியாகச் சென்று கேள்வி கேட்க தயாரா? இந்தியாவை ஆண்ட டம்மி முதல் மந்திரி மன்மோகன்சிங் ஆட்சியில் உங்கள் மனோ நிலை எப்படி இருந்தது? இப்போது திரு.மோடி அவர்கள் ஆட்சியில் உங்கள் மனோ நிலை எப்படி இருக்கிறது ?
Rate this:
Cancel
mohan - Dindigul,இந்தியா
28-ஜன-202009:46:42 IST Report Abuse
mohan பலமானவனா நாம் ஆகிவிட்டாலே தேவையில்லாமல் நம்மிடம் மோத மாட்டார்கள்.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
27-ஜன-202023:43:51 IST Report Abuse
chakra "சீனாவை மனதில் வைத்து ஆயுத பலத்தை ராணுவம் அதிகரிக்க துவங்கி உள்ளது" காமெடி கீமடி எதுவும் பண்ணலியே . சீனாகிட்ட பேசறதுக்கு தைரியம் இருக்கா
Rate this:
Hari - chennai,இந்தியா
28-ஜன-202013:06:46 IST Report Abuse
Hariமுதலில் உங்களை மாதிரி நீரோ மன்னர்களை ,போர் முனைக்கு புல் புடுங்க அனுப்பனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X