வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறும் நீதிபதிகள் அனைவரும் நீட் தேர்வு எழுதியா பதவிக்கு வந்தார்கள் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியில் நடைபெற்ற நெல் அறுவடை திருவிழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் மையங்களை முற்றுகையிட்டு பிள்ளைகளை தேர்வு எழுத விடாமல் தடுத்து நிறுத்துவோம்.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்கு நீதிமன்றங்கள் யார்? நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் அனைவரும் நீட் தேர்வு எழுதித்தான் அந்த பதவிக்கு வந்தார்களா? எனக் கேட்டுள்ளார்.

நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதி, நுழைவுத்தேர்வு. இதனை சட்டத்துறையை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் எழுத முடியாது. இது கூட தெரியாத சீமான் போன்றவர்கள் நீட் தேர்வை எதிர்க்கிறேன் என்ற பெயரில் என்ன பேசுகிறோம், என தெரியாமல் பேசுகிறார்களே என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் நொந்து கொண்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE