வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக பற்றி அவதூறு தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், மிசாவையே கண்டவர்கள். வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் என ஸ்டாலின் பேசியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு, சிறந்த நிர்வாகம் செய்த மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அது தொடர்பான ஸ்டாலினின் அறிக்கை முரசொலி பத்திரிகையிலும் வெளியானது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி பற்றியும், அதிமுக பற்றியும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ஸ்டாலின் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் 2 அவதூறு வழக்குகள் தொடர்ந்தார்.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் வழக்கு பற்றி பேசியதாவது: என் மீது போடப்பட்ட வழக்குகள் பற்றி நான் அஞ்சப்போவதில்லை. 2 அல்லது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம். மிசாவையே கண்டவர்கள் நாங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE