அரசியலில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா? ராமதாஸ் கேள்வி

Updated : ஜன 31, 2020 | Added : ஜன 31, 2020 | கருத்துகள் (141) | |
Advertisement
சென்னை: 'முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக, சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா' என, ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:* முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது; அரசியலில் இருந்து விலகத் தயாரா என, சவால் விட்டதெல்லாம், வழக்கம் போல
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்,ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக, சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா' என, ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


'டுவிட்டர்' பக்கத்தில், ராமதாஸ் கூறியிருப்பதாவது:


* முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறதாமே. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது; அரசியலில் இருந்து விலகத் தயாரா என, சவால் விட்டதெல்லாம், வழக்கம் போல வெற்றுச் சவாடல் தானா?.



* அரசியல் உலகில், எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும், சிறந்த பல்டி, முரசொலி நிலம் மீதான பழியை துடைப்போம் என, வீரவசனம் பேசி விட்டு, இப்போது, நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என, சரண் அடைந்தது தான்.



latest tamil news


* முரசொலி அலுவலகம், வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா; மூலப் பத்திரத்தை தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம், வாடகை ஒப்பந்தத்தையாவது, முரசொலி நிர்வாகம் வெளியிடுமா; கூடவே சவால் விட்டவர், அரசியலில் இருந்து விலகுவாரா?.



* அகில இந்தியாவில் மட்டுமல்ல, ஈரேழு லோகத்திலும், வாடகை கட்டடத்தில் இருந்து கொண்டு, உரிமையாளர் சார்பில், அவதுாறு வழக்கு தொடர்ந்த, ஒரே கம்பெனி, முரசொலி தான். வெறும் கையால் முழம் போடுவதில், இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (141)

konanki - Chennai,இந்தியா
31-ஜன-202022:21:31 IST Report Abuse
konanki உடைஞ்சு நிதி அவருக்கு பின் துன்பநதி இவர்களை திமுக தலைவர் ஆக்கி பின் சுடலை அரசியலில் இருந்து விலகுவார்
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
31-ஜன-202020:06:40 IST Report Abuse
Anbu சொல்லமுடியாது ..... இப்போ அறைகூவல் விடுக்குற பெரிய டவுசரு, அடுத்த வருஷமே தேர்தலுக்கு மூணு மாசம் முன்னாடி, சுடலையோட ஒரே மேடையேறி கைகளைக் கோர்த்து உயர்த்திப் பிடித்து """" மத்திய மதவாத அரசையும், மாநில ஊழல் அரசையும் விரட்டுவோம் """" என்று கர்ஜிப்பாரு ..... இவரோட நம்பகத்தன்மை அப்படி .....
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
31-ஜன-202018:05:45 IST Report Abuse
Baskar யார் என்ன கேள்வி கேட்டாலும் எனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாது. என்னை பற்றி என்ன பேசினாலும் இந்த காதில் வாங்கி மறு காதில் விடுபவன் . அதனால தான் மூலபத்திரிகையை பற்றி நானோ என் கட்சியினரே பேசக்கூடாது என்று வாய் மொழி உத்தரவு இட்டுள்ளேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X