வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் நகரோட்டா பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் தப்பி சென்றனர்.

காஷ்மீரில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், வந்த டிரக்கை, சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் மறைந்து வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ் காயமடைந்தார். பதிலுக்கு, போலீசாரும் திருப்பி சுட துவங்கினர். இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், ஸ்ரீநகருக்கு செல்ல முயன்றபோது, மோதல் நடந்தது. இவர்கள், கதுவா, ஹிரா நகர் பகுதி வழியாக ஊடுருவியிருக்கலாம் என தெரிகிறது என்றார்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE